வளைத் தளம் திறக்க, பெற்றெடுத்து மகிழ்திட்ட தாயாய்...


Shared privately

வானிலும் நீதான் தெரிகின்றாய்! - உன்னை
வளர் பிறை, முழு நிலா அழகு...
நிலைகளிலும் காண்கின்றேன்!

தூணிலும் நீதான் தெரிகின்றாய்!
கோயில்கள் கலைநய சிலைகளிலும்.
காண்கின்றேன்!

தேனிலும் நீதான் தெரிகின்றாய்!
கனித்தமிழ் சுரந்திடும் அன்புபா,,,
சுவைகளிலும் காண்கின்றேன்!

காணும் இயற்கை எழில்உள்ளும்,
நீதான் தெரிகின்றாய்!

கண்ணாடி முன்நிற்க என்றன் விழிகளின்...
பிம்பத்துள்ளும் காண்கின்றேன்!

என்னை பெற்றெடுத்து மகிழ்திட்ட...
தாயாய், நீதான் தெரிகின்றாய்!

அவளின் மடிமேல் உற ங்கிடும்...
பிள்ளையாகவும் காண்கின்றேன்

என்றன் வளைத் தளம் திறக்க
அன்றாடம் என்னைக்கண்டு
நீயும் புன்னகைப் புரிகின்றாய் !

ஏன் மகளே! உன்னை அங்கே வந்து,
எப்போது நேரில் கண்டிடுவேன்?

கருத்துகள்