இவை யாவும் இந்து தெய்வங்களாம் எவனை இறைவன் என்பேன்!



உந்திவழி சிந்திட உதிரம் பத்தாம்மாதம் ஓர்நாளில்;
தந்திட தாய்பிரசவ வலியேர்டு, எவனும் தாவிவெளி;
வந்திட்ட இரகசியம் என்னவாம்? பதில்தெரிந்து...
நொந்திட்டேன்நான் நீயும்அவ் வதந்தியை கேளேன்!

மந்தமதி உள்ளவன் வாந்தி எடுத்திட்ட கற்பனையுள்,
தந்திரமாய் ஓதுவது தரணியுள் உயிர்கள் அனைத்தும்;
தந்திட்டது தாய்தந்தை அல்லவாம்! பேதவம்சத்தான்...
சந்தமாய், சாந்தமாய், புளுகிட்டான்; தெய்வமாம்!

மந்திகள், பக்தப்பன்றிகள்; மட்டுமே மானுடம் என்பதாய்,
மந்தைகள் முன்னே மந்த வெளியில் இருந்து...
எநதிரங்கள் போல்தினம் இயங்கி ஓதி ஏமாற்றிட்டான்!
தந்திரம், அல்லவாம்! யாவும்  தெய்வச் செயலாம்!
தொந்தரவு தாளாமல் செத்துப்போ என்றால்...

பொருள் உடையோர்கு, இவ்வுலகம் என்றும்;
அருள்உடையோர்கு, அவ்வுலகம் என்றும்;
குடிகள் அரசனுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும்;
அரசன் ஆண்டவனுக்குக் கட்டுப்பட்டவன் என்றும்... [ஆக]

ஆண்டவன் உட்பட யாவரும் *சுரருக்கு கட்டுப்பட்ட...
அடிமைகள் என்றும்; இன்றும் மண்ணின்மைந்தர் உழைப்பை,
சுரண்டுவோன் வாழையடி வாழைஅன்ன மதஊழலால்,
சுதந்திரம் நம்நாடு மக்கள்அன்ன சுக்குநூறு ஆனதே!

*சுரருக்கு - பார்பனருக்கு  


கடவுளை கற்பித்திட்டவன் செப்பிட்டதுபடி, அவன்ஓதிடும்;
படைத்தோரில் ஒருவன் இரண்டாயிரம் பெண்டிரை புணர்நதிட்ட;
பாரதமகா காமுகன் காலம்தொட்டு, மானுடத்தை பிளந்துபலநூறு 
கூறுகளில் அசுரராகவும் சுரராகவும் பிரித்திட்ட பேத...
மனநோயன் வனமிருக(ம்) தலையொடு, மானமானுட-

இனம்காத்திட்ட இரண்யனைக் கொன்றிட்ட சிங்கமாம்!
மற்றொருவன் ஓரினச் சேர்கையாளன் இன்னமும்... செப்பிடு;
அப்பனை அறியாப்பிள்ளை பெண்ஒருத்தியின் அழுக்குஅனாதை
யாவும் இந்து தெய்வங்களாம் எவனைநான் இறைவன் என்பேன்!

கருத்துகள்