முன்னேறு முரட்டுக் குதிரையே!

https://plus.google.com/u/0/app/basic/stream/z12lelx4woqzgzq4l04cgvshqnjke11azco?cbp=1blhhik01b6rk&sview=2&cid=5&soc-app=115&soc-platform=1&aa=ac&

மரமோ எரிந்தால் கரியாகும்!
மக்கிப் புதைந்தால் உரமாகும்!
பறைந்திடும்உன் ஆண்டவன் படைப்புக்கள்...

மடிந்து மறைந்தால் எதுவாகும்?
மண்ணோடு உறவாடி... 
உடல்அழகு சிதையும்;   மண்ஆகும்!


உயிர்எது ஆயினும்; எந்த... உடலுக்கும்,
பிறப்பு ஒருமுறைதான்;

வாழ்க்கைக்கு வாய்ப்பும்;
மரணமுறும் சடலத்திற்கு,
ஓய்வும்; ஒரு தடவைதான்!

மானுடத்துள்  பேதங்கள் ஓதி,
யாவும் கடவுளால்தான்...
ஆயிற்று என்றும்;

போன பிறவிகளின் வினை,
விளைவே! என்பதாக...
மறுப்பிறப்பும், என்றும்;

ஊழல் ஆசாமிகள் இதுவரை 
வாழும் மானுடத்தை, வதைத்திட்டது போதும்! 

எமக்குப் பின் தொடரும் உலக, வாரிசுகள்; அறிவியலில்,
ஒற்றுமைப் பூக்களாய்...
மலர்ந்திடட்டும்!

எதிர்காலங்களில் வளம்பெற்று,
வாழையடி, வாழைகள், சோலைகள் அன்ன;
உன்றன் ஆற்றல்களினால்...

ஒன்றுப்பட்டு மணக்கட்டும்!
வாழ்த்துக் கூறி பாய்ந்திடு;
பேதமுற்கள் இல்லா வழியில்... முன்னேறு முரட்டுக் குதிரையே!


கருத்துகள்