தாய் அன்பு துய்க்காத வாழ்கையென்றால் எனக்கு, இறைவன்...


   ஓவியம் :    आशीष शर्मा



இதுபோல் பெற்றவளின் அணைப்புநான் அடைந்தேனா?
எனக்கு தெரியவில்லை!

அதுதான் அம்மா எனும்பிணைப்பு என்றால் நிகரானது... 
எது? ஆண்டவனும் இல்லை!

அம்மா இல்லாது ஓர்வாழ்கையென்றால்... இறைவன்...
எனக்கு அவசியமோ? இல்லை!

அம்மாஇறந்து அப்பா தனிமைப்பட ஆலயம் எதற்கு?
கல்வி தளங்களாக ஆக்குங்கள்;  கற்க அறிவியலை   மூளை!

                 பெண் என்பவள்...?  

கருவாகி உருவாகி காலத்தில் மழலையாகி;
மெருகாகி அழகாக பருவத்தில்கனியாகி...
உறவறிய தாயாகி உணர்வில் பாசசுவாசமாகி;
சருகாகி தாய்வாழ்த்தும் பிள்ளைக்கு நாளும்...
உருகுகிற மெழுகாகி... ஓய்கிறவள் பெண்!





கருத்துகள்