போற்றப் படுவோன் மதத்தால் ஞானிஎன யார்ஆகினாலும்...



நோயுற்றும் சிற்பி கோயில் நுழைவாயுள் கருவறையுள்;
ஆயுளில்இறுதிநாள்கண்டும்அழகுதெரித்திடசெதுக்கிட்ட
தேயாகல் பதுமைகள் மறைந்துற்றஉன்நாகரிக  மூதாதையர்
தாயும் சேயும் தகப்பனும் அவர்களின் பெண்ணேநீ!

ஆயாநம் முன்னோடி வாரிசுகள் உருவ படிவங்கள்தான்!
ஓயாதுஉன் முன்னோரை தேவதை ஆண்டவன் எனகல்ஆ
லாயங்களுள் ஆரியன் ஓதும் நடனபதுமை ஓவியங்களை
நீயேபூசைசெய் பார்ப்பனனின் ஆகம விதிதடை எதற்கு?

போற்றப் படுவோன்  மதஞானி யாய்யார் ஆகினாலும்... 
சாற்றிட்டஅச் சாமியாரின் ஆலோசனை ஏதாகினாலும்;
தாழ்த்தப்பட்டு இந்துவெறி வாவெளி கிரகத்தானோல்...
தூற்றப்பட்டு அந்தப்படிக்கு துயர்படுத்திடுவோனை-

ஊற்றிநெய்​யை குடங்குடமாய் நெருப்பில் தீய்த்தல் அன்ன
தீட்டுப்பற்றுடை தீண்டாமை மனநோய் ஆரிய அன்னியனை
நாட்டை கடவுள் மதம்பூசை சாதின் என்று சுரண்டவே!
வேற்றுமை கொசுக்களாய் ஊழல் புரியவே! அனுமதிக்கவோ?



ஓடி ஓடி ஓடியே உருஅறி யாத வெறுமையை
நாடி நாடி நாடியே நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடியே மாண்டவர்கள் நாளுமே
கோடி கோடி கோடியே எண்நிறைந்த கோடியே!

பாடல் - சிவவாக்கியர்

பாடலில் 'உருஅறியாத வெறுமையை' அல்லது
அது போன்றதை நீக்கி உட்கலந்தசோதி
என்பதானது எந்தப் பார்ப்பனனால் நுழைக்கப்
பட்டது என்பதுஆய்வுச்செய்யப்படவேண்டிய
ஒன்று]

திருக்குறள் உட்பட ஏராளமான தமிழ்
இலக்கியங்களில் பாக்கள் ஆரியர்களால்
மறைக்கப்பட்டும் மெய்பொருள் மாறுப்பட
சொற்கள் நீக்கப்பட்டும் தொடர்பற்ற
சொற்கள் நுழைக்கப்பட்டும் உள்ளன!




கருத்துகள்